எங்களின் திட்டங்கள்

1. எங்கள் நிறுவனமானது கடந்த 2016 ம் ஆண்டு முதல் குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் அடர்நடவு வாழையை அறிமுகப்படுத்தி, நெல், காய்கறி வகைகள் போன்றவற்றை பயிரிட்டு சந்தைப்படுத்தி வருகின்றது.

2. பணிக்கம்பட்டி கிராமத்தில் நெல் விதை சாகுபடி செய்து அரசு விலை பண்ணைக்கு சான்றழிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது.

3. திருந்திய நெல் சாகுபடி முறையினை அக்கிராம விவசாயிகளுக்கு நேர்முக பயிற்சி செய்து விழிப்புணர்வு அளித்தது. பயிர் சுழற்சி முறையில் காய்கறி பயிர்களை முதல் முறையாக பல விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மேட்டுப்பட்டி கிராமத்தில் 50 மாடுகள் வளர்க்கும் வகையில் பண்ணை நிறுவப்பட்டு வெற்றிகரமாக கறவை மாட்டுப்பண்ணை 23.10.2019 முதல் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. தெளிப்பு நீர் பாசன முறையில் தீவணப்புல் வளர்க்கப்பட்டு வருகின்றது. தரிசாக கிடந்த நலத்தை சீர் அமைத்து, வேலி அமைத்து. ஆழ்குழாய் கிணறு தோண்டி அனைத்து விதமான மேலாண்மை ஆலோசனையும் வழங்கி வருகின்றோம்.

4. கரூர் மாவட்டம், மாயனூர் முடக்கு சாலையின் அருகில் இயங்கி வரும் தர்ன் ஆயுர்வேத மதுத்துவமனையின் விவசாய பண்ணையில் இயற்கை முறையில் வெள்ளைப் பொன்னி நெல் சாகுபடி செய்து வருகின்றோம் மற்றும் அவர்களுக்கு மேலாண்மை ஆலோசனையும் வழங்கி வருகின்றோம். பஞ்சகாவியம், தசகாவியம், மீன்அமிலம், நீர் மோர் கரைசல், குப்பைகளை மக்க வைக்கும் உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தாயர் செய்து பயன்படுத்தி வருகின்றோம்.

எங்களை கைபேசியில் தொடர்புகொள்ள +91 97873 17901
எங்களை மின்னஞ்சலில் தொடர்புகொள்ள uzhavarulagam2019@gmail.com
எங்களை அலுவலகத்தில் தொடர்புகொள்ள காந்திகிராமம் தெற்கு, கரூர்.
பதிவு செய்யுமிடம்

Color Schemes

Which Template color you want to use? Select from here.