எங்களைப்பற்றி

நாங்கள் யார் ?

உழவருலகம் நிறுவனம் தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2016ம் ஆண்டு முதல் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சேவைகளை தமிழக விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. முதலில் கரூர் மாவட்டம், குளித்தலையை மையமாக கொண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது கரூர் மாவட்டத்தில் காந்திகிராமத்தில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவர் அவர்கள், இளநிலை விவசாயம் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நபார்டு (NABARD) மற்றும் (MANAGE) இணைந்து நடத்தும் அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிஸினஸ் சென்ட்டர் (AC&ABC) பயிற்சி பெற்றவர், இவர் தமிழ்நாட்டில் வேளாண் பல்கலை கழகத்தில் இயங்கி வரும் மத்திய வேளான்மை அமைச்சகத்தின் விவசாய தகவல் அமைப்பு மையத்தில் (Kissan Call Center) 4 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து தமிழக விவசாயிகளுக்கு பல சேவைகளை தொலைபேசி வாயிலாக அளித்து வந்தவர். இவர் நோக்கத்திற்கு உறுதுணையாக பல விவசாயிகள் விவசாய வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பயிற்றுனர்கள், வங்கியாளர்கள் என பலர் இவரது சேவைக்கு உறுதுணையாக உள்ளது ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பல சேவைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். வரும் காலத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினையும், விவசாயிகளின் உற்பத்தியை பெருக்கியும், உலகத் தரத்தில் தமிழக விவசாயிகளை உயர்த்திடுவதே இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

Logo
slider
slider
எங்களை கைபேசியில் தொடர்புகொள்ள +91 97873 17901
எங்களை மின்னஞ்சலில் தொடர்புகொள்ள uzhavarulagam2019@gmail.com
எங்களை அலுவலகத்தில் தொடர்புகொள்ள காந்திகிராமம் தெற்கு, கரூர்.
பதிவு செய்யுமிடம்

Color Schemes

Which Template color you want to use? Select from here.